states

img

லாஸ்பேட்டையில் காவல்  ரோந்தை தீவிரப்படுத்த கோரிக்கை

புதுச்சேரி,ஜூன் 17- லாஸ்பேட்டை பகுதி முழுவதும் காவல் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக  லாஸ்பேட்டை பகுதியில் சமீப காலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஈ.சி.ஆர் சாலை சாமிபிள்ளை தோட்டம், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையம் சமீப  காலமாக இயங்கவில்லை. எனவே இந்தக் காவல் நிலையங்களை 24 மணி நேரமும் செயல்படுத்தி, குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும்.  லாஸ்பேட்டை பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுப வர்களை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் பாஸ்கர், பிரதேச செயளாலர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் உழவர் கரை நகரச் செயலாளர் சஞ்சைசேகரன்,இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ், நிர்வாகி சத்யவேலன் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.