புதுச்சேரி, பிப். 3- புதுச்சேரியில் இரு சக்கர மோட்டார் வாடகை நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இருசக்கர மோட்டார் வாடகை நிலை யத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை உடனடியாக புதுச்சேரி போக்குவரத்துறை ரத்து செய்ய வேண்டும், சட்ட விரோத மாக செயல்படும் இருசக்கர மோட்டார் வாடகை வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனு வாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், சிஐடியு நிர்வாகிகள், மதிவாணன், வடிவேல், துளசிங்கம், மது, நூர் முகமது, பழனிபாலன், செந்தில்குமார், ரவிக்குமார், குமாரவேல், ராமு, முருகன், ஆனந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து சட்டபேரவையை முற்றுகையிட வந்த ஆட்டோ ஓட்டுநர்களை நேரு வீதி மீன் மார்க்கெட் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.