tamilnadu

img

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்க: இரா.முத்தரசன்

கடலூர், ஜூன் 4-ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார். கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட் டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித் துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மணிவாசகம் தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டன உரையாற்றினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுச் சேரி மாநிலத்திலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு அமைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான பணிகளை வேதாந்தா நிறுவனமும் சில பணிகளை மட்டுமே ஓஎன்ஜிசி செய்து வருகிறது. காவிரி டெல்டா பகுதி முப்போகம் விளையும் பகுதியாகவும், மக்கள் அடர்த்தி கொண்ட பகுதியாகவும் இருப்பதால் இத்திட்டத்திற்காக அவர்களை வெளியேற்றவும், விவசாயத்தை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலையும் உருவாகும்” என்றார்.