tamilnadu

img

பள்ளிகள் திறந்த முதல்நாளே பாடநூல்கள், சீருடை சென்னையில் முதலமைச்சர் வழங்கினார்

பள்ளிகள் திறந்த முதல்நாளே பாடநூல்கள், சீருடை  சென்னையில் முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, ஜூன் 2 - தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திங்க ளன்று (ஜூன் 2) மாநிலம் முழு வதும் பள்ளிகள் திறக்கப் பட்டன. 2025-26 கல்வி யாண்டின் முதல் நாள் என்ப தால், மிகுந்த ஆர்வத்துட னும் உற்சாகத்துடனும் மாணவ - மாணவியர் பள்ளி களுக்கு வந்தனர். இதனிடையே ஏற்கென வே அறிவிக்கப்பட்ட பள்ளி திறந்த முதல் நாளிலேயே, மாணவ - மாணவியர்க்கு பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட் டன. சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பாடநூல்கள் - சீருடைகளை வழங்கினார். அத்துடன், திறன்மிகு வகுப்பறையில் மாணவர் களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத்தையும் கவ னித்தார். ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரை யாடலும் நடத்தினார். அவ ருடன் அமைச்சர்கள் மகேஸ், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.  தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டில் சுமார் 311 கோடி ரூபாய் மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், சுமார் 457 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள், 162 கோடி ரூபாய் மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்த கங்கள் மற்றும் 211 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கல்வி உபகர ணங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.