states

img

புதுவை மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து பிரச்சாரம்

புதுச்சேரி, ஜூலை 23- மின்துறை தனியார் மயத்தை கைவிடக் கோரி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரம்  நடைபெற்றது. புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து கேரளா, தமிழகத்தை போல் அரிசி, கோதுமை சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வகை யில் கடலூர் சாலையிலுள்ள தியாகி கள் சிலையிலிருந்து பிரச்சார இயக்கம் சனிக்கிழமை (ஜூலை 23) துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை தாங்கி னார். பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தலைவர் முருகன் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மின்துறை தனி யார் மைய எதிர்ப்பு போராட்டக் குழு ஆலோசகர் ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனி வாசன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்யா, நகரச் செய லாளர்கள் மதிவாணன், ராம்ஜி, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள், சங்கர், சரவணன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தியாகிகள் சிலை அருகில்  துவங்கிய பிரச்சாரம் நெல்லித் தோப்பு, சாரம் லெனின் வீதி,  பெரியார் சிலை, நேரு வீதி, காந்திவீதி,  அஜந்தா தியேட்டர், முத்தியால்பேட்டை , கருவடிக்குப்பம், பெத்து செட்டி பேட்டை ,செல்வ பெருமாள் பேட்டை, லாஸ்பேட்டை, கதிர்காமம் வழியாகச் மேட்டுப்பாளையத்தில் நிறைவடைந்தது.