states

img

தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி அடுத்து தொண்டமாநத்தத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் கண்ணாடி தொழிற்சாலை தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி சிஐடியு கவுரவத் தலைவர் கே.முருகன் தலைமையில் தொழிற்சாலை வளாகத்தில் நவம்பர் 9ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு பிரேதேசக்குழு சார்பில் செவ்வாயன்று (நவ. 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜி.சினுவாசன் தலைமை வகித்தார். தொழிற்சங்க மூத்த தலைவர் தா.முருகன்,சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பேசினர்.