states

பெகுசாராயில் வன்முறை: மருத்துவமனை, குடிசைக்கு தீவைத்த குண்டர்கள்

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்  டம் ரூப்நகரைச் சேர்ந்த சந்தன் குமார். பிரபல ரவுடியான இவர் உடல்நல பாதிப்பு காரணமாக அப்பகுதி யில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ரவுடி என்ப தால் சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க  மருத்துவர் அஜித் பஸ்வான் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி சந்தன்குமார் மருத்துவர் அஜித் பஸ்வானை தாக்கியுள்ளார். மருத்துவர்  அஜித் பஸ்வானும், மருத்துவமனை ஊழி யர்களும் பதில் தாக்குதல் தொடுக்க, சந்தன்குமார் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார்.

இந்நிலையில், ஆத்திரம் அடைந்த  ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் கும்ப லாக சென்று மருத்துவமனை மீது தாக்கு தல் நடத்தி, மருத்துவமனைக்கும் அரு கில் உள்ள பல குடிசைகளுக்கும் தீ வைத்  தனர். இதனால் பெகுசாராயில் பதற்ற மான சூழல் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தன்குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மருத்துவர் அஜித் பஸ்வான், மருத்துவமனை ஊழியர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.