தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்பவர் பீகார் ஜகதிஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணிஷிக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.42 லட்சத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியிருந்தனர்.