states

மோடி அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு (NEET UG Exam)  கடந்த ஞாயிறன்று (மே 5) நாடு முழுவ தும் 557 நகரங்களில் நடைபெற்றது.  24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த நீட் தேர்விற் கான முடிவுகள் வரும் ஜூன் 14 அன்று வெளி யாக உள்ள நிலையில், நீட் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. 

நீட் தேர்வு நடைபெற்ற மறுநாளான மே 8 அன்று பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது, ஆள்மாறாட்டச் சம்ப வங்கள் நிகழ்ந்தது  தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலை யில், பீகார் மாநிலத்தில் நீட் தேர்வின் போது மேலும் ஒரு நூதன மோசடி அரங்கேறி உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

பீகார் தலைநகர் பாட்னா புறவழிச்சாலையில் உள்ள ராமகிருஷ்ண நகர் அடுக்குமாடி குடியிருப் பில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளான மே 4 அன்று சமஸ்தீபூரைச் சேர்ந்த யாதவேந்து என்ற நபர் 20 மாணவர்களுக்கு விடையுடன் கூடிய வினாத் தாள் வழங்கியுள்ளார். இதற்காக அவர் பல கோடி யில் தொகை பெற்றுள்ளது தெரியவந்த நிலை யில், யாதவேந்துவை போலீசார் கைது செய்த னர். மேலும் இதுதொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேரை கைது செய்துள்ளதாக பாட்னா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.