states

img

நீடிக்கிறார் நிதிஷ் குமார்

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்  குமார். 2022இல் திடீரென பாஜகவுட னான கூட்டணியை முறித்துக் கொண்டு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய  ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து, “மகா” கூட்  டணியின் தலைவராகவும், பீகார் முதல்வ ராகவும் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள  தலைவர் தேஜஸ்வி பொறுப்பேற்  றார். இந்நிலையில், கடந்த மாதம்  “மகா” கூட்டணிக்கு எப்படி வந்தாரோ?  அதுபோலவே மீண்டும் பாஜக கூட்ட ணியில் இணைந்து முதல்வராக பொறுப்பேற்று, தேசிய அளவில் “இந்தியா” கூட்டணியில் இருந்தும் விலகினார்.

இந்த சூழலில் நிதிஷ்குமார் அரசு  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளு நர் உத்தரவிட்டார். இதையடுத்து, திங்  களன்று பீகார் சட்டமன்றத்தில் அர சின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

சபாநாயகர் நீக்கம்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்  னதாக, சபாநாயகருக்கு எதிராக  பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் நம்  பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 125 எம்எல்ஏக்கள் தீர்மா னத்திற்கு ஆதரவாகவும், 112 எம்எல் ஏக்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, பீகார் சபாநாய கர் பதவியில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத்  பிஹாரி சவுத்ரி நீக்கம் செய்யப்பட் டார். 

தொடர்ந்து நம்பிக்கை வாக்கெ டுப்பு நடைபெற்றது. 243 எம்எல்ஏக் களை கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற  நிலையில், 130 சட்டமன்ற உறுப்பி னர்கள் நிதிஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “மகா” கூட்டணி (ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர்) நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. 

இதனையடுத்து பீகாரில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா  (மதச்சார்பற்ற) கூட்டணி ஆட்சி அமைந்தது.

3 ஆர்ஜேடி 
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக

பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கு போது மான பெரும்பான்மை பலம்  இருந்தும், நம்பிக்கை வாக்கெ டுப்பிற்காக ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் 3 எம்எல்ஏக்களை (சேட்டன் ஆனந்த், நீலம் தேவி, பிர கலாத்) விலைக்கு வாங்கி, தங்கள்  கூட்டணிக்கு வாக்களிக்க வைத் துள்ளது பாஜக.

பீகார் மக்கள் 
பதிலடி தருவார்கள்!

தேஜஸ்வி கடும் சாடல்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதாதள  தலைவரும், முன்னாள் துணை  முதல்வருமான தேஜஸ்வி பேசு கையில், “நிதிஷ் குமாரை எங்கள்  குடும்ப உறுப்பினராக நினைக்கி றோம். அதாவது உங்களை (நிதிஷ்  குமார்) ஒரு தந்தை என்ற முறை யில் தசரதனாக நான் பார்க்கிறேன்.  தசரதன் தனது மகன் ராமனை காட்டுக்கு அனுப்பினார். தற்பொ ழுது நிதிஷ் குமார் தசரதனாக ஆவ தற்கான நெருக்கடி அளிக்கப் பட்டுள்ள நிலையில், பீகார் மக்க ளின் உணர்வுகளை புரிந்து கொள்  ளாமல் என்னை மட்டும் நிதிஷ்  குமார் காட்டுக்கு அனுப்பிவிட்டார்.

மோடி உத்தரவாதம் அளிப்பாரா?
நிதிஷ் குமார் அவர்களே, முன்பு பாஜகவை விமர்சித்தீர்கள்,  இப்போது பாஜகவை பாராட்டு கிறீர்கள். நீங்கள் ராஜினாமா செய்  வதற்கு காரணம் என்ன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர். பதில் சொல்ல தயாரா? தனது ஆட்  சிக்காலத்தில் 9 முறை பதவியேற்ற  ஒரே முதல்வர் நிதிஷ்குமார்தான். இனி ஒருபோதும் நிதிஷ்குமாரை பீகார் மக்கள் நம்பமாட்டார்கள். ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏக்கள், மக்கள் மத்தியில் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ என் பதை நினைத்துதான் எனக்கு பரி தாபமாக இருக்கிறது. நிதிஷ்குமார்  மீண்டும் அணி மாற மாட்டார் என்று மோடியால் உத்தரவாதம் அளிக்க முடியுமா” என கேள்வி எழுப்பினார். 

தேஜஸ்வி பேசும் பொழுது நிதிஷ் குமார் கண்கலங்கிய நிலை யில் எதுவும் பேச முடியாமலும், எதிர்க்கட்சி வரிசையை பார்க்காம லும் சபாநாயகரை மட்டுமே பார்த்து பரிதாபமாக அமர்ந்திருந்தார்.