பாட்னா, ஜன. 29 - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின், ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ திங்க ளன்று பீகார் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை வரவேற்க பீகார் மக்களும், இந்தியா கூட்டணி தொண் டர்களும் கடல்போல கூடியதால், மேற்குவங்கம் - பீகார் எல்லை ஸ்தம் பித்தது. இந்தியா கூட்டணியிலிருந்த நிதிஷ் குமார், ஞாயிறன்று பாஜக கூட்ட ணிக்குத் தாவிய நிலையில், அது, பீகா ரில் இந்தியா கூட்டணிக்கு பின்னடை வாக இருக்கும் என பாஜக கணக்குப் போட்டிருந்த நிலையில், ராகுலை வரவேற்க முன்னெப்போதும் இல்லாத அளவில் திரண்ட கூட்டம், பாஜக-வின் மனக்கணக்கை சுக்குநூறாக உடைத் தெறிந்துள்ளது.
பாஜக தலைவர்களை யும் நிதிஷ்குமாரையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு, கன்னியாகுமரி முதல் காஷ் மீர் வரை (தெற்கில் துவங்கி வடக்கு நோக்கி) 4000 கி.மீ. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். தற்போது 2-ஆம் கட்டமாக மணிப்பூர் முதல் மகா ராஷ்டிரா வரை (மேற்கு துவங்கி கிழக்கு நோக்கி) ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’யை ராகுல் மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரை, பாஜகவின் இழி வான வாக்கு அரசியலால் வன்முறை பூமியாக மாறியிருக்கும் மணிப்பூரில் தொடங்கி, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை கடந்து திங்களன்று பீகார் மாநிலத்தை அடைந்தது.
நிதிஷ் தான் பாஜகவுடன் சென்றார்: மக்கள் செல்லவில்லை
இந்நிலையிலேயே, பீகாரின் எல் லையில் ராகுல் காந்தியின் யாத்திரை யை மக்கள் கடல் போல திரண்டு வர வேற்றதும், யாத்திரையால் கிஷன்கஞ் சாலைகள் ஸ்தம்பித்து, மேற்குவங்க மாநிலத்திற்கான போக்குவரத்தே துண் டிக்கப்பட்ட நிகழ்வு, ஆளும் பாஜக - ஜேடியு கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிதிஷ் குமார், பாஜக-வுடன் இணைந்ததால் பீகாரில் ராகுல் காந்தி யின் ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்தி ரைக்கு’ மக்கள் ஆதரவு குறையும் என சில ஊடகங்கள் தனி ஸ்க்ரிப்ட் மூலம் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. ஆனால் ஊடகங்களின் செய்திகளுக்கு தங்களது ஆதரவு மூலம் பீகார் மக்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளனர்.
அதாவது, ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ பீகார் மாநிலம் கிஷன்கஞ் சில் நுழைந்த பொழுது, பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்தில் யாத்திரை மிதந்து வந்தது. நிதிஷ் குமார்தான் பாஜகவுடன் சென்றார், மக்களா கிய நாங்கள் செல்லவில்லை என யாத்திரை வரவேற்பு மூலம் பீகார் மக்கள் உணர்த்தினர்.
ஆர்எஸ்எஸ் - பாஜக வன்முறையை பரப்புகின்றன
பின்னர், பீகாரின் கிஷன்கஞ்சில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை யாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் கூறுகையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி வருகின்றன. இவர்களது சித்தாந்தங்களால் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நமது சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சில சகோதரர்கள் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சித்தாந்தங்களை ஒழிக்க ஒன்றாகப் போராடுகிறார்கள். மேலும் மொழிகள், சாதிகளை வைத்து வெறுப்பு தூண்டப்படுவதால் மக்களும் சண்டையிடுகிறார்கள். இருப்பினும் நாங்கள் ‘வெறுப்பு என்னும் சந்தையில், அன்பு என்னும் கடையை திறக்க விரும்புகிறோம்’ என ராகுல் காந்தி கூறினார்.
“இந்தியா” கூட்டணி தலைவர்கள் பேரணி
‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ செவ்வாயன்று பூர்ணியா மாவட்டத்தில் நுழைகிறது. பூர்ணியாவில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி பிரம்மாண்ட பேர ணிக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், இந்த பேரணி யில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.