பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ஞாயிறன்று (அக்., 8) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஐ(எம்) ஊழியர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், பாஜகவை தோற்கடிக்க மக்கள் ஒற்றுமையை உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.