பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத் தில் தலித் பெண் ஒருவர் ரூ.9,000 வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு ரூ.1,500 வட்டி கட்டா மல் இருந்துள்ள நிலையில், சனியன்று (செப்., 23) இரவு 10 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பம்பிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது 6 பேர் கொண்ட கந்துவட்டி கும்பல் தலித் பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமா கத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் காயம் அடைந்த தலித் பெண் கீழே சரிந்து விழுந்துள்ளார். அப்பொழுது கும்பலில் ஒருவர் சிறுநீரை எடுத்து தலித் பெண் மீது வாயில் ஊற்றியுள்ளார். மீண்டும் கட்டையால் தாக்கிய நிலை யில், வலி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து காவல் நிலை யத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். தலை யில் பலத்த காயத்துடன் தலித் பெண்ணை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள் ளனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப் பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக டிஎஸ்பி பதுஹா எஸ்.யாதவ் கூறியுள்ளார்.