பாட்னா, ஜூன் 15 - ராணுவத்திற்கு நிரந்தரமாக அல்லாமல், 4 ஆண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெ டுக்கும் ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 75 சதவிகிதம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். 25 சதவிகிதம் பேர் தகுதிக்கேற்ப நிரந்தரமாக ராணுவப் பணியில் அமர்த்தப்படலாம்; ஆனால், அதற்கு உத்தரவாதம் எதுவும் கிடை யாது. மேலும், 4 ஆண்டு பணி முடித்தவர் களுக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப் படாது. மாறாக, ஓய்வுக்கால பலன் என்ற அடிப்படையில் ரூ. 12 லட்சம் வரை வழங்கப்படும். அதுவும் வீரர்கள் பணி யாற்றும் 4 ஆண்டுக் காலத்தில், அவர் களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதன்மூலமே இந்த ஓய்வுக்கால பலன் வழங்கப்படும் என்றும் மோடி அரசு கூறி யுள்ளது. ராணுவ வீரர்களுக்கான செலவை குறைக்கும் வகையிலேயே இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோடி அரசின் இந்த திட்டத்தின் மூலம் தங்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்த திட் டத்தின் மூலம் 25 சதவிகிதம் போ் மட்டுமே வழக்கமான பணியில் சேர முடி யும் என கூறி பீகாரில் இளைஞா்கள் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முசாபர்பூர் நெடுஞ்சாலையில் குவிந்த இளைஞர்கள், “எங்களுக்கு வேலை கொடுங்கள்; இல்லையென் றால் எங்களை கொன்று விடுங்கள்” என மோடி அரசுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பியும், டயர்களை சாலையில் கொளுத்திப் போட்டும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ள னர். “கொரோனா தொற்று பரவல் கார ணமாக 2 ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பணி நடைபெறவில்லை. எனவே வழக்கமான ஆட்சோ்ப்பு நடை பெறும் என 2 ஆண்டுகளாக காத்தி ருந்தோம். ஆனால் அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. இதனை ஏற்க முடியாது!” என்றும் அவர்கள் கூறி யுள்ளனர். மேலும் ராணுவத்தில் 4 ஆண்டு கள் பணி முடித்த பிறகு அக்னிபாத் வீரர்களுக்கு பிற துறை வேலைவாய்ப்பு களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வும் வலியுறுத்தியுள்ளனர்.