states

img

பீகார்: வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - 4 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. குறிப்புகளாக ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மதுரையில் நடந்த ரயில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லியிலிருந்து அசாம் மாநிலம் காமக்யாவுக்கு சென்ற வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள், நேற்று இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.