பாட்னா, நவ. 7 - உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள் அடங்கிய 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனா ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தையும், பாஜக நான்கு இடங்களையும் வென்றுள்ளன. பீகார் மாநிலம் மெகாமா தொகுதி யை ராஷ்ட்ரிய ஜனதாதளமும், மகாரா ஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகு தியை சிவசேனாவும் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் முனுகோடு தொகுதியையும் ஹரி யானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி யையும் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. உ.பி. மாநிலம் கோலா கோக்ரநாத் தொகுதி, பீகார் மாநிலம் கோபால்கஞ்ச், ஒடிசா மாநிலம் தாம்நகர் ஆகிய 3 தொகு திகள் பாஜக வசம் இருந்த நிலையில், அந்த தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டதுடன், ஹரியானாவின் ஆதம் பூர் தொகுதியை புதிதாக கைப்பற்றி யுள்ளது.
காங்கிரசில் இரண்டு முறை எம்.பி.யாகவும், நான்கு முறை எம்எல்ஏ-வாகவும் இருந்த குல்தீப் பிஷ்னோய், காங்கிரஸில் இருந்து விலகி கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில், குல்தீப் பிஷ்னோயின் மகன் பவ்யா பிஷ்னோயை (29) தனது வேட்பாளராக நிறுத்தியே, ஆதம்பூர் தொகுதியை பாஜக தன் கைவசமாக்கி உள்ளது. இதேபோல தெலுங்கானா மாநிலம் முனுகோடு தொகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி யை ராஜினாமா செய்ய வைத்து, அந்த இடம் காலியான நிலையில், அவரை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி யிறைத்தது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த தொகுதியை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கைப்பற்றியது. மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிலிருந்தே பாஜக ஒதுங்கிக் கொண்டது. இங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே வேட்பாளர் ருதுஜா லட்கே 66 ஆயிரத்து 530 (77 சதவிகிதம்)வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இங்கு நோட்டாவுக்கு 12 ஆயிரத்து 806 (14 சதவிகிதம்) வாக்குகள் கிடைத்துள்ளன.
இவை ஒருபுறமிருக்க, பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் தொகுதியில் அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தய விலேயே பாஜக வென்றிருப்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. கோபால் கஞ்ச் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் குசும் தேவியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மோகன் பிரசாத் குப்தாவும் போட்டியிட்டனர். ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடை பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் குசும் தேவி 70 ஆயிரத்து 053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் மோகன் பிரசாத் குப்தா 68 ஆயிரத்து 259 வாக்குகள் பெற்று தோற்றுப் போனார். இரு வருக்குமான வித்தியாசம் வெறும் 1,794 வாக்குகள் மட்டுமே ஆகும். ஆனால், இதே தேர்தலில் அசாது தீன் ஓவைசி-யின் மஜ்லிஸ் கட்சி வேட்பா ளர் அப்துல் சலாம் பெற்றது 12 ஆயி ரத்து 214 வாக்குகள் ஆகும். அதேபோல மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இந்திரா யாதவ் பெற்ற வாக்கு கள் 8 ஆயிரத்து 853 ஆகும். இது குசும் தேவி-க்கும் மோகன் பிரசாத் குப்தா வுக்கும் இடையிலான வாக்கு வித்தி யாசத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். இதில் மாயாவதி கட்சி வேட்பாளர் இந்திரா யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத்தின் மைத்துனர் மனைவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவைசி மற்றும் மாயாவதி கட்சி வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள் தொடர்ந்து பாஜக வெற்றிக்கு உதவிகரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.