states

img

17 வயது சிறுமி சுட்டுக்கொலை

பீகார் தலைநகர் பாட்னா அருகே மசௌரியில் உள்ள நட்வான் சாபூரைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவரது மகள்  அனாமிகா (17) நாள்  தோறும் அருகே உள்ள மணிச்சக் மோட்டில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காக செல்வது வழக்கம்.

திங்களன்று காலை அனாமிகா பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த பொழுது மணிச்சக் மோட் அருகே 3 பேர்  கொண்ட மர்ம நபர்கள் அனாமிகாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தலை யில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அனாமிகா மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பட்டப்பகலிலேயே சிறுமி துப்பிக்கி யால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்  கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.