states

img

பீகாரில் லாரி மோதிய விபத்து

பீகாரில் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பீகார் சாப்ரா மாவட்டத்தில் தும்டுமா கிராமத்தில் உள்ள மஷ்ராக்-மல்மாலியா மாநில நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் திருமண நிகழ்ச்சியின்போது பெண்கள் சிலர் சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த லாரி ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில்  சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மஷ்ராக் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சாப்ரா சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அதனைதொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை மஷ்ராக் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;