states

img

பீகார் சாலை விபத்து - 12 பேர் பலி

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்திலுள்ள மேஹ்னர் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது வேகமாக வந்த லாரி சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.