states

img

விலை வீழ்ச்சியால் ஆப்பிள் விவசாயிகள் கடும் பாதிப்பு

சண்டிகர் (பஞ்சாப்), ஜன.23- ஆப்பிள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்க மாநாடு முடிவு செய்துள்ளது. வெள்ளியன்று (ஜன.19) சண்டிகர் சீமா பவனில் முடிவடைந்த அகில இந்திய ஆப்பிள் விவசாயிகள் கூட்ட மைப்பின் (AFFI) இரண்டு நாள் அகில இந்திய மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்க நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் மாநாட்டை துவக்கி வைத்தார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், இமாச்சல பிரதேச முன்னாள் எம்எல்ஏ ராகேஷ் சிங் மற்றும் பலர் மாநாட்டில் பேசினர். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆப்பிள் விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆப்பிள் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் பிரச்சனைகள் மீதான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கிசான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஜன வரி 26-ஆம் தேதி ‘டிராக்டர் அணி வகுப்பு’ மற்றும் பிப்ரவரி 16-ஆம் தேதி கிராம முழு அடைப்பு (கிராமினா பந்த்) ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதாக மாநாடு அறிவித்தது.

விலை வீழ்ச்சியாலும், அரசின் ஆத ரவு இல்லாததாலும் ஆப்பிள் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆலங்கட்டி போன்ற இயற்கை சீற்றங்கள் ஆப்பிள் சாகுபடி மற்றும் அறுவடையையும் பாதிக்கிறது.  உற்பத்தித் திறன் தேக்கமடைகிறது. போதிய மானியத்துடன்கூடிய  கொள் முதல் முறை காலத்தின் தேவை.

இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 56,000 விவசாயிகளை சேர்க்க மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. ஏஎப்எப்ஐ தற்போது 10,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மாநாட்டில் பதினொரு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. முஹம்மது யூசுப் தாரிகாமி மற்றும் ராகேஷ் சின்கா ஆகியோர் அழைப்பாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.