அம்ரித்சரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம், அம்ரித்சரில் கோயில் ஒன்றில் சாமி சிலையை குப்பையில் வீசியதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த அக்கட்சி மூத்த தலைவர் சுதிர் சூரி மீது குடியிருப்புப் பகுதியிலிருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.