states

img

திறம் - அறம் - மனிதம்!

விடுதலைப் போராட்டத்தின் இறுதி கால கட்டத்தில் 1946, செப்டம்பர் 25 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசர ஸில் பிறந்தவர் பிஷன் சிங் பேடி. 13 பிள்ளைகளில் இவர் கடைக்குட்டி சிங்கம். கிரிக்கெட் மட்டையுடன் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அவரது வயது 13. வானொலியில் கிரிக்கெட் போட்டி யின் வர்ணனையை கேட்க தொடங்கிய திலிருந்து தானும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். சுழல் பந்து வீசு வதில் ஆர்வம் காட்டினார். அசாத்திய திறமையால் 16 வயதில் உள்ளூரில் வடக்கு பஞ்சாப் அணியில் கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார். 20 வயதில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டு  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதா னத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் அறிமுக மானார். முதன் முதலில் களம் இறங்கிய அந்த ஆட்டத்தில் அசத்தலாக பந்து வீசினார். தொடர்ந்து 12  ஆண்டு காலம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இடையில் நான்காண்டு காலம் கேப்டனாகவும் அணியை வழிநடத்திச் சென்றார்.

இந்திய கிரிக்கெட்டின் அடையாள மாக திகழ்ந்த பிஷன் சிங் பேடி, தனது சிறந்த பந்து வீச்சுக்கள் மூலம் மறக்க முடியாத பல வெற்றிகளை தேடித்  தந்தவர். களத்தில் மந்திர சுழற் பந்து  வீச்சால் எதிரணி வீரர்களை திணறடித்த வர். அசத்தலான கிரிக்கெட் வீரர் மட்டு மல்ல, சிறந்த மனிதரும் கூட. இந்திய சுழற் பந்து ஜாம்பவான்கள் பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராமன் ஆகியோருடன் இணைந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக உலக கிரிக்கெட்டில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினார். சரியான ‘லென்த்தில்’பந்தை வித விதமாக சுழலச் செய்வதில் வல்லவர் பேடி, பந்து வீசும் பொழுது மட்டை வீச்சா ளர்கள் எந்த மனநிலையில் இருக் கிறார்கள், எப்படி எதிர்கொள்ளப் போகிறா ர்கள்  என்பதையும் அறிந்து அதற்கு ஏற்ப தனது திட்டத்தை மாற்றி மாற்றி பந்து  வீசுவதில் அவருக்கு நிகர் அவரே. நாட்டுக்காக மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பிஷன் சிங் பேடி, 200 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரராவார். மொத்தம் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதக மான ஆடுகளமான பெர்த் மைதானத் தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ‘சுழல்’ ஜாலம் மூலம் இரண்டு இன்னிங்சிலும் 10 விக் கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றி க்கு துணை நின்றார். டெஸ்ட் அரங்கில் அதுவே அவரது சிறந்த பந்துவீச்சு பதிவும் கூட. டெஸ்ட் போட்டி அரங்கில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட்டை 14 முறை சாய்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி  1975 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த ஆட்டத்தில் 12 ஓவர்கள் வீசிய பிஷன் சிங் பேடி, 8 ஓவரில் (48 பந்துகளில்) வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் தர கிரிக்கெட்டில் 377 போட்டி களில் 1,560 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் இன்றும் ‘நம்பர் ஒன்’ வீரர் பட்டியலில் உள்ளார்

பிஷன் சிங் பேடி. அதுமட்டுமல்ல, உள்ளூரில் மிக வும் பிரபலமான ரஞ்சிக் கோப்பையை தில்லி அணி இவரது தலைமையில் இரண்டு முறை வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1976 ஆம் ஆண்டு ஜமைக்கா வின் சபீனா பார்க் மைதானத்தில் நடந்த போட்டியின் போது ஆடுகளம் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் சீரற்றதாக  வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டதால் துணிச்சல்காரர் என்று பாராட்டப்பட்டார். 1977 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் தன்மையை மாற்ற ‘வாசலின்’ திரவத்தை தேய்த்து பளபளக்கச் செய்ததை எதிர்த்து புகார் கூறினார். இந்த விவகாரம் பின்னர், பூதாகரமாக வெடித்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தில்லி கிரிக்கெட் சங்கத்தின் மோச மான நிர்வாகத்தை கடுமையாக எதிர்த்தார். ஒரு கட்டத்தில் தில்லி கிரிக்கெட்  சங்கத்தில் இருந்தும், அந்த மைதானத்தின் கேலரியில் இருந்தும் தனது பெயரை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதனால், எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்ற பெயர் எடுத்தார். குவாலியர் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, கராச்சிக்குச் சென்று ரத்த  தானம் செய்தார். அவரது இந்த மனித நேயத்தை பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் பெனாசிர் பூட்டோ வெகுவாகப் பாராட்டினார். தனது ஓய்வுக்கு பிறகு, பயிற்சியாள ராகவும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.