ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சௌதிரி (77) மரணமடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் பில்லோரில் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சௌதிரி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.