பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத் தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 30க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளியன்று இரவு வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 14 ஆக இருந்தது. சனியன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இத னால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந் துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.