பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை காணத்தவறிய மாணவர்கள் மீது சண்டீகர் செவிலியர் கல்வி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமரின்100-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், சண்டீகர் தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் முதல் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் கல்வி நிறுவனத்தின் உத்தரவை மீறி 100-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை காணத்தவறிய 36 மாணவர்களை ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதித்து கல்வி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.