states

img

தேர்தலுக்காக திருப்பதி ஏழுமலையானையும் பிரதமர் மோடி விட்டுவைக்கவில்லை

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த மோடி திங்களன்று திருப் பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரி சனம் செய்ய சென்றார். மோடிக்கு திருப்பதி தேவஸ்தானம் சிவப் புக் கம்பள வரவேற்பு அளித்த நிலையில், இதுதொடர்பான செய்தி  திங்களன்றே நிறைவு  பெற்றது. ஆனால்  திருப்பதி கோவிலில் மோடியின் வருகையை  புகைப்படம் பிடித்த பக்தர் ஒருவரின் வீடியோ தேசிய அளவில் 48 மணிநேரமாக தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்கிறார். அவருக்குப் பின்னால் 4 போட்டோ கிராபர்கள் ஓடிவருகின்றனர். அவர் செல்லும் பாதைக்கு மேலே வீடியோகிராபர் ஒருவரும் இருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்
சுமார் 40 நொடிகள் ஓடும் இந்த வீடியோ வை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்  ரமேஷ் கிண்டல் செய்து டுவிட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேர்த லுக்காக திருப்பதி பெருமானை கூட மாஸ்டர் (பிரதமர் மோடி) விட்டுவைக்கவில்லை.கோவிந்தா! கோவிந்தா!” என பதிவிட்டுள்ளார்.