தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணத் தொகையை விடுவிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பேரணியுடன் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் இந்த போராட்டத்தால் ஹைதராபாத், நல்கொண்டா, மஞ்சேரியல், ஆசிபாபாத், கட்வால் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.