தெலுங்கானா மாநிலத்தில் நவம் பர் 30 அன்று சட்டமன்ற தேர் தல் நடைபெறுகிறது. தொடக் கத்தில் ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி யை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வென்று கடும் போட்டியை அளிக்கும் என பல் வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் முடிவுகளை வெளியிட்டன.
ஆனால் கடந்த 2 வாரத்தில் வெளி யாகிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தலை கீழாக மாறி, மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் ஞாயிறன்று பிரபல ஊடக நிறுவனமான சவுத் பர்ஸ்ட் (South First) தெலுங்கானா தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டது. பெரும்பான் மைக்கு 60 இடங்கள் தேவை இலையில் என்ற நிலையில் சவுத் பர்ஸ்ட் கருத்துக் கணிப்பு முடிவில்,”காங்கிரஸ் கட்சி 57 முதல் 62 தொகுதிகளில் வென்று ஆட்சி யை கைப்பற்றும் என்றும், ஆளும் பிஆர்எஸ் 41 முதல் 47 தொகுதிகளை கைப் பற்றி ஆட்சியை இழக்கும் என்றும், ஏஐ எம்ஐஎம் 6 முதல் 7 தொகுதிகளையும், பாஜகவிற்கு வழக்கம் போல 3 முதல் 6 தொகுதிகள் என ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் கிடைக்கும் என தெரி விக்கப்ட்டுள்ளது.
கடந்த வாரம் லோக் போல் (LOK POLL) நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு மற்றும் தெலுங்கான உள வுத்துறை வெளியிட்ட தகவலில் காங்கி ரஸ் கட்சி 70 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியை கைப்பற்றும் என்றும், பிஆர்எஸ் 40 தொகுதிகளை தாண்டுவது சிரமம் என தகவல் வெளியாகியது.