states

img

தெலுங்கானா, ஆந்திரா, தில்லி, ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி!

“தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. எங்கள் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க இவர்கள் (பாஜக-வினர்) திட்டம் போடுகிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது.

ஹைதராபாத், நவ. 4 - எதிர்க்கட்சிகள் தலைமையில் நடக்கும் 4 மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதித் திட்டத்தில் இறங்கியிருப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.  சந்திரசேகர ராவ் பரபரப்புக் குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச  நீதிமன்றம் தலையிட்டு, நாட்டின் ஜன நாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் வேண்டு கோள் விடுத்துள்ளார். தென் மாநிலங்களில், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சி யதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாஜக, அடுத்ததாக தெலுங்கானா-வைக்  குறிவைத்து காய்களை நகர்த்தி வரு கிறது. கடந்த ஜூலை மாதம் தெலுங் கானா தலைநகர் ஹைதராபாத்தில் தனது தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டிய பாஜக, அதில் ‘ஆபரேசன் சவுத்  இந்தியா’ திட்டத்தை அமித்ஷா மூல மாக அறிவித்தது. அப்போது முதலே அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தெலுங் கானாவுக்குச் சென்று  சந்திரசேகர ராவ் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். ஆளுநர் தமிழிசையும் தன்பங்கிற்கு சில சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கு பதிலடியாக, 2024 மக்கள வைத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக  அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில்  திரட்டும் முயற்சியை சந்திரசேகர ராவ்  கையிலெடுத்தார். தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு அடையாளமாக தனது கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்றும் மாற்றினார். பாஜக-வை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். தெலுங்கானாவிற்கு பிரதமர் மோடி வந்தால் அவரை வரவேற்காமல் புறக்கணிப்பதால், ஆளுநர் தமிழி சையை அழைக்காமலேயே சட்ட மன்றத்தைக் கூட்டுவது என்று பதிலடி கொடுத்து வருகிறார். இதனிடையே, ஆளும் தெலுங் கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ-க்கள் ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு  ஆகிய 4 பேரை பாஜக-வுக்கு இழுக்க  சிலர் ரூ. 400 கோடி வரை பேரம் பேசிய தாக அண்மையில் செய்திகள், புகைப் பட மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளி யாகின. இவ்விஷயத்தில் எம்எல்ஏ ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்ப டையில், பணபேரத்தில் ஈடுபட்ட சதீஷ்  சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜுலு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரத்திற்கு பணியாத 4 எம்எல்ஏ-க்களை மேடையில் ஏற்றிப் பாராட்டிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தில்லியை  சேர்ந்த சில புரோக்கர்கள் பேரம் பேசிய தாக பகிரங்கமாக விமர்சித்தார். ஆனால், பாஜக இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில், தனது கட்சி எம்எல்ஏ-க்களிடம் பாஜகவுக்கு நெருக்க மான 3 பேர் பேரம் நடத்திய வீடியோ  ஆதாரத்தையும் வெளியிட்டு தெலுங் கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்  அதிரடி காட்டியுள்ளார். நவம்பர் 3-ஆம் தேதி மாலை முனுகோடு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இந்த வீடி யோவை வெளியிட்ட சந்திரசேகர ராவ், “தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. எங்கள் எம்எல்ஏ -க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க இவர்கள் (பாஜக-வினர்) திட்டம் போடுகிறார்கள். அதற்கு அனு மதிக்க முடியாது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. கையும், களவுமாக அவர்கள் சிக்கிவிட்டனர்” என்று கூறி யுள்ளார். மேலும் பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவது  மோடிக்குத்தான் அசிங்கமாக முடியும்..!

“பணபேரத்தில் ஈடுபட்ட 3 பேரும், முன்பு 8 மாநில அரசுகளை எப்படி கவிழ்த்தோம் என்பதை வீடியோவில் தெளிவாக கூறுகின்றனர்; அவர்கள் நாட்டின் மூத்த தலைவர்களின் பெயர் களையும் குறிப்பிடுகின்றனர். இந்த வீடியோக்களை பாஜக அல்லாத  மாநில முதல்வர்களுக்கு அனுப்பு வேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதிக்கு அனுப்புவேன். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்புவேன். தேர்தல் ஆணையத்திற்கு இந்த வீடி யோவை அனுப்புவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்க, இவர்கள் மோசமாகத் திட்டம் போடுகின்றனர். ஜனநாயகத்தை நசுக்க இவர்கள் சதித்திட்டம் தீட்டு கின்றனர். உச்ச நீதிமன்றம்தான் நாட்டை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில்  தெலுங்கானா அரசு கவிழ்ந்துவிடும் என்று கடந்த அக்டோபரில் முனுகோ டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா கூறினார். உங்களிடம் (ஊட கங்களிடம்) கையெடுத்து கும்பிடு கிறேன், இந்த வீடியோக்களை மக்களி டம் கொண்டு செல்லுங்கள். தெலுங் கானா, ஆந்திர பிரதேசம், தில்லி, ராஜஸ் தான் ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சி யைக் கவிழ்க்க சதி நடக்கிறது. இந்த  வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவர் துஷார். இவர் அமித் ஷாவின் ஆள், பாஜக சார்பில் வயநாட்டில் தேர்தலில் போட்டியிட்டவர். இவர் தான் ஆட்சியை கவிழ்ப்பதற்கான திட்டங் களை வகுத்து வருகிறார். பிரதமர் மோடியிடம் சொல்கிறேன்.. நானும் உங்களை போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்தான். உங்களை போல அரசியலமைப்பு சட்ட ரீதியாகத்தான் நானும் ஆட்சி செய்து வருகிறேன். இதுபோன்ற மோசமான சதித்திட்டங்களை நிறுத்துங்கள். இது நல்லதற்கல்ல. உங்களுக்குத்தான் இது அசிங்கத்தை ஏற்படுத்தும்.” இவ்வாறு சந்திரசேகர ராவ் தனது  பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.