states

img

தெலுங்கானா: மர குடோனில்  தீ விபத்து

தெலுங்கானாவில் மரக்குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போய்குடா பகுதியில் உள்ள மரப்பொருள்கள் குடோன் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். 
இந்த தீ விபத்தில் மரப்பொருள்கள் குடோனிலேயே தங்கி  பணிபுரிந்து வந்த வட மாநில கூலித் தொழிலாளர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
குடோனில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.