states

img

சிறுதானியங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை

ஹைதராபாத், ஜன.1 - 2018-ஆம் ஆண்டு தேசிய சிறுதானிய ஆண்டாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, சிறுதானிய வகைகளுக்கு, ‘ஊட்டச்சத்து மிக்க தானியங்கள்’ என்று புதுப்பெயரையும் இந்திய அரசு சூட்டியது.  கடைசியாக, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேச, அதனையொட்டி, பிரதம ரின் இந்த தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய பாஜக அரசு ஜம்பம் அடித்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியப் பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, ஐக்கிய நாடுகள் அவையானது, 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. ஜி20 மாநாடு உட்பட பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் சிறுதானிய உணவு வகைகள் முக்கிய இடத்தைப் பிடித்தன

எதிர்கொள்ளும் சவால்

இவ்வாறு சிறுதானியத்திற்கு ஒன்றிய அரசு பெரும் முக்கியத்துவம் அளிப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அவற்றுக்கு இப்போதுவரை குறைந்தபட்ச ஆதார விலை உறுதிசெய்யப்படவில்லை என்பது தான் கசப்பான உண்மையாக இருக்கிறது. இவ்வாறு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாதவரை, சிறுதானிய சாகுபடி எவ்வாறு அதிகரிக்கும்? விவசாயிகள் எவ்வாறு ஆர்வத்து டன் சிறுதானிய சாகுபடியில் ஈடுபடுவார்கள்? இதற்கு மோடி அரசுதான் பதில் சொல்ல வேண்டும். இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை சிறுதானியங்கள் பிடித்திருக்கிறது. ஆனால் அவைகள் வணிகப் பயிர்களால் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக சிறு பெண் விவசாயி கள் தனியாக மேற்கொண்டுவரும் சிறுதானிய உற்பத்தியை சமூக உற்பத்தியாக மாற்று வதற்கான வழிகாட்டுதலை டெக்கான் டெவ லப்பிங் சொசைட்டி (Deccan Developing society -DDS) என்ற அமைப்பு செய்கிறது. 

வணிகப்பயிர் சாகுபடிக்கு தள்ளப்படும் நிலை

இந்த அமைப்பு கடந்த வாரம் ஹைதரா பாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் பத்தாபூர் (padtapur) என்ற பகுதியிலுள்ள தங்களின் தலைமையகத்தில் சிறுதானிய உற்பத்தி குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்ட சிறு பெண் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை தொடர்பான தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மெட்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான சூர்யகலா என்ற விவசாயி இதுபற்றிக் கூறும்போது, “பல சிறு விவசாயிகள் சிறு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய பயிர்களை பயிரிட விரும்புகின்றனர். அந்த நிலத்தில் அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், வணிகப் பயிர் சாகுபடிக்கே குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மானியம் கிடைப்பதால் வணிகப் பயிர் சாகுபடியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். உற்பத்தி செய்யப்படும் ஒன்பது சிறுதானியங்களில் சோளம், கம்பு மற்றும் ராகிக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கிறது” என்று தெரிவிக்கிறார். சூரியகலா, அகில இந்திய சிறுதானிய சகோதரிகள் நெட்வொர்க் (All  India Millet Sister’s Network) அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார்.

அரசே கொள்முதல் செய்க!

“தற்போது வீட்டு நுகர்தலுக்காக உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து, உபரி தானியங்களை அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் அரசு அங்கன்வாடிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கு  பொது விநியோக முறை மூலம் மக்களுக்கும் விநியோகித்தால் அவர்களும் இந்த உணவை உட்கொள்ள முடியும்” என்று சூரியகலா கூறுகிறார். யாதாரி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வருபா என்ற பெண் விவசாயியும், “எங்களுடைய பயிர்கள் (சிறுதானியங்கள்) மக்களுக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும் கால்நடைகளுக்கும் மிகவும் உகந்ததாகும். ஆனால், அரசாங்கம், கூடுத லான தண்ணீர் தேவைப்படக் கூடிய மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் வணிகப் பயிர்களுக்கே, பயிர்க் காப்பீடும் மானியமும் வழங்குகிறது” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

பாரம்பரிய பயிராக அறிவித்திடுக!

இந்நிகழ்ச்சியின் இறுதி நாளில், தேசிய நெட்வொர்க் பகுதியின் அங்கமான தெலுங்கானா  மாநிலத்தின் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் சகோதரிகள், சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.  1. ஒன்றிய அரசும், மாநில அரசும் சிறுதானியப் பயிரை பாரம்பரியப் பயிராக அறிவித்து, அதன் சாகுபடியில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். 2.கலப்பு விதைகளை மாற்றி, சமூக விதை வங்கி யை உருவாக்கி, அதன் முழு அதிகாரத்தையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

பயிர்க்காப்பீட்டை விரிவுபடுத்துக!

3.சிறுதானிய பயிர்களை உற்பத்தி செய்பவர் களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு பருவத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். '

4.பருவகால சூழலால் பறவைகள் மூலமும் விலங்குகள் மூலமும் சிறுதானிய பயிர் களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் காப்பீடு தேவைப்படுகிறது. எனவே, அரசு பயிர்க் காப்பீட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும். 

-ஆகியவை அவர்களின் கோரிக்கை களாகும். இதனை நிறைவேற்றுவதன் மூலமே, சிறுதானிய சாகுபடி பாரம்பரிய உணவு வகை கள் மீது உண்மையிலேயே ஒன்றிய அரசு அக்கறை கொண்டிருக்கிறது என்று கூறமுடியும்.

 ஆதாரம் : பிசினஸ் லைன்; 
தமிழில் : ஆர். மைதிலி, திருப்பூர்