states

img

அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும்-தெலங்கானா பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

தெலுங்கானாவில் அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும் . ஒரு வேளை சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டால் அந்த மசூதிகளை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்து ஏக்தா யாத்திரையில் பங்கேற்றுப் பேசிய பண்டி சஞ்சய் குமார், மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மசூதிகளையும் தோண்டுவோம்.. சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்திற்கு இஸ்லாமியர்கள் உரிமை கோரலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தெலங்கானாவில் பாஜக ஆட்சி வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம் என பேசியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தெலங்கானாவில் அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும் என தெலங்கானா பாஜக தலைவர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

;