states

img

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறைமுகமாக விமர்சித்த விவகாரம்

ஹைதராபாத் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி,”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வுடன் பிஆர்எஸ் கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்  கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல  மேடைகளில் பேசியிருந்தோம். இதற்கு சந்திர சேகரராவ் உட்பட பலர் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கவிதா ஜாமீனில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கைது  செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதங்களி லேயே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள் ளதே பாஜக - பிஆர்எஸ் கூட்டணிக்கான சான்றா கும்” என பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவின் ஜாமீன் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு வியாழ னன்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கண்டனம்  தெரிவித்தது. இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கவாய் தலை மையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு   கூறுகையில்,”பொறுப்புள்ள முதல்வரிடம் இது போன்ற கருத்துக்கள் நாங்கள் எதிர்பார்க்க வில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியுடன் விவா தித்த பின்னரே உச்சநீதிமன்றம் எந்த ஒரு  வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கும் என்று நினைக்கிறீர்களா? இதுவே உங்கள் அணுகு முறையாக இருந்தால், இந்த நாட்டின் உச்சநீதி மன்றத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே அர்த்தமாகும்” என தெலுங்கானா அரசு  சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் கண்டனம் தெரிவித்தது. 

வருத்தம்

இந்நிலையில், வெள்ளியன்று பிஆர்எஸ் கவிதா ஜாமீன் விவகாரத்தில் கருத்து தெரி வித்ததற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த்  ரெட்டி வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில்,”நான் தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளியான கருத்துகளுக்காக நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரி யாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. இந்திய  அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறி முறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட  நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்” என அவர் தெரி வித்துள்ளார்.