திருவனந்தபுரம், நவ.22- தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி அண்ட் ஏஜி) தனது கடமைகளை அச்சம், வெறுப்பு, புகழ் ஆர்வமின்றி செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அர சாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்த சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்யும் முக்கியமான பணி சிஏஜிக்கு உள்ளது. சிஏஜியின் முடிவுகளின் அடிப்படை யில் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் முடிவெ டுக்கும். எனவே, சிஏஜி எந்த ஆர்வத்தாலும் பாதிக்கப்படக் கூடாது. சி அண்ட் ஏஜி கேரள கள அதிகாரிகள் ஏற்பாடு செய்த தணிக்கை தின நிகழ்ச்சிகளை நவம்பர் 21 திங்களன்று முதல்வர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: சிஏஜி பதவிக்கு அரசமைப்பு ரீதியான பாதுகாப்பு உள்ளது. இது மற்றபல அரசமைப்பு நிறுவ னங்களைப் போன்றது அல்ல. நடுநிலையாகவும் திறமையாகவும் செயல்பட அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவசமாகும். அதிலிருந்து அணுவள வும் விலகல் இருக்கக்கூடாது. தணிக்கை மற்றும் மறுஆய்வு நல்ல விஷயங்கள் என்றாலும், அதிகாரிகளில் ஒரு பகுதியினர் பயந்து முடிவு களை எடுக்கத் தயங்குகிறார்கள்.
இது ஒரு கட் டத்தில் கொள்கை முடக்கத்தை ஏற்படுத்தியது. இது பரவலாக மாறினால் நாட்டின் முன்னேற் றத்திற்கு பின்னடைவு ஏற்படும். 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள் ளத்தின் போது, அனைவரும் இணைந்து முன்னு தாரணமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆபத்தை முடிந்தவரை குறைக்க அந்த நேரத்தில் முன்முயற்சி எடுத்த அதிகாரிகள் குறித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சில முரண்பாடான கருத்துக்கள் எழுந்தன. போர்க்கால அடிப்படை யில் பணியாற்ற வேண்டிய துறைகளையும், அதி காரிகளையும் இதுபோன்ற கருத்துக்கள் எந்தள வுக்கு பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிலை தணிக்கை நிலைமையின் தீவிரம் மற்றும் தனித்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். - இதுபோன்ற விஷயங்களில் இயந்திர கதியான அணுகுமுறை பொருத்தமானதாக இருக்காது. முடிவெடுக்கும் போதே தணிக்கைத் துறை யின் கருத்தை தெரிந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டால், எதிர்காலத்தில் கெட்ட காரியங்க ளுக்கு பயந்து அதிகாரிகள் ஒதுங்கும் நிலையைத் தவிர்க்கலாம் என்றார் முதல்வர். நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.என்.பாலகோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.சந்திரசேகரன், சன்னி ஜோசப், முதன்மை கணக்காளர் ஜெனரல் டாக்டர். பிஜூ ஜேக்கப், முதன்ம ஏ.ஜி.சுதர்மினி, அன்னி செரியன், என்.இ.மாதச்சன் ஆகியோர் பேசினர்.