பாஜக ஆளும் சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டம் அதிக மலை வனப்பகுதி கொண்டதாகும். இந்த பகுதியின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு பாது காப்புப் படை வீரர்கள் (சிஆர்பிஎப்) தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்குச் சென்றனர். அம்பேலி கிராமத்திற்கு (குத்ரு காவல்நிலையம் அருகே) அருகே பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனம் மீது ஐஇடி வெடிகுண்டுகள் மூலம் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் பாது காப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது வாகும். கடந்த 2023இல் அண்டை நாடான தண்டேவாடா மாவட்டத்தில் பாது காப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்களும், ஒரு பாது காப்புப் படை வீரரும், வாகன ஓட்டுநரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.