அகர்தலா, செப்.30- வேலையின்மை மற்றும் போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிராக திரிபுராவில் துடிப்பான இளைஞர் அணிவகுப்பு நடைபெற்றது. அகர்தலாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் திரிபுரா வாலிபர் சங்கமும் இணைந்து நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் சமூக விரோத கும்பல்களுக்கு வாய்ப்பளிக்கும் பாஜகவின் தவறான ஆட்சிக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக இப்பேரணி அமைந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் மாணிக் சர்க்கார், மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.