https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
மோடியின் மற்றொரு விருப்பத்திற்குரிய கார்ப்பரேட் முதலாளிக்கு கொள்ளை லாபம் வாரி வழங்கப்பட்டுள்ளது! ஆனால், மிக மிக குறைவான விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், குறைக்கப்பட்ட விலையின் சிறு துளி வளம் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. ரஷ்யாவிலிருந்து மிகக்குறைவான விலைக்கு இறக்குமதி செய்து, அதை சுத்திகரிப்பு செய்து அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள எண்ணெய் நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாக்க இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு லாபத்தை குவிக்கின்றன!
ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி
அம்பானிக்கு கல்லா கட்ட உதவும் மோடி அரசு
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்ச் சூழல் காரணமாக ரஷ்யா, இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் அளித்து வருகிறது. அதாவது குறைந்த விலையில் வழங்கி வருகிறது. ஆனால் ஒன்றிய மோடி அரசு, இதனால் கிடைக்கும் பலனை மக்களுக்கு அளிக்கா மல் அம்பானிக்கு கல்லா கட்ட உதவி வருகிறது.
மோடி - அம்பானி
ஒன்றிய பாஜக அரசின் அனைத்து செயல்பாடுகளும் பிரதமர் மோடியின் கூட்டுக் களவாணிகளான அதானி, அம்பானி யின் நலன் சார்ந்ததாகவே உள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்திலும் மோடி அரசின் மறைமுக உள்ளடி வேலை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, உக்ரைன் மீதான போரால் உலகளவில் பல்வேறு தடைகளுக்கு உள்ளானது. இப்போரைத் தூண்டிவிட்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே, பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ரஷ்யா தனது முக்கிய நட்பு நாடான இந்தியா வுக்கு மலிவு விலையில், அதாவது தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கிடத் தயார் என்றது. 2023 ஏப்ரல் மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ரஷ்ய கச்சா எண்ணெய்யை அதிக அளவில் கடல்வழியில் வாங்கும் மிகப்பெரிய நாடு என்ற பெயரைப் பெற்றது இந்தியா. ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய்யை நாளொன்றுக்கு 1.63 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி என்ற அளவில் கொள்முதல் செய்தது இந்தியா. இது கடந்த ஆண்டு டிசம்பரை விட அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் நாளொன்றுக்கு சுமார் 1.22 மில்லியன் பீப்பாய்களே இறக்குமதி செய்யப்பட்டன. 2023 நிதியாண்டின் பெரும்பகுதியில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஒரு பீப்பாய்க்கு 15 முதல் 20 டாலர் (தோராயமாக ரூ.1635) வரை தள்ளுபடியைப் பெற்றுள்ளது. ஆனாலும் ஏப்ரல் 2022 முதல் உள்ளூர் பெட்ரோல் - டீசல் விற்பனை விலைகள் இறங்காமல் உயர்வு நிலையில் இருந்தன. மலிவான கச்சா எண்ணெய் விலையின் பலன்களை ஒன்றிய அரசு மக்களுக்கு வழங்கவில்லை.
எல்லாம் அம்பானிக்காக!
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் வேலையை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கவனித்து வருகின்றன என கருதப்பட்ட நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் குஜராத்தில் இயங்கும் நிறுவனமான நயாரா எனர்ஜி ஆகியவை நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்த இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி போன்றவை மட்டும் கிட்டத்தட்ட 46% வாங்கியுள்ளன. அம்பானியின் ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 5.24 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்துள்ளன. மேலும், கிழக்கு சைபீரியா-பசிபிக் பெருங்கடல் எண்ணெய்க் குழாய் வழியாக (ESPO) நாள்தோறும் 1.23 லட்சம் பீப்பாய்களும், வரண்டே திட்டம் (ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைப்பு) வாயிலாக நாள்தோறும் 67,000 பீப்பாய்களும், அர்கோ (மராத்தான் பெட்ரோலியத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களின் பிராண்ட்) மூலம் 35,000 பீப்பாய்களும் ஏப்ரல் மாதத்தில் அம்பானியின் ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இறக்குமதி செய்துள்ளன.