states

‘இந்தியாவில் எக்ஸ்இ கொரோனா பாதிப்பு இல்லை’

புதுதில்லி,ஏப்.7-  இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால்  கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே இங்கிலாந்தில் முதன்முதலாக புதிய மாறுபட்ட கொரோனா திரிபு கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும். கொரோனா புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.  இந்நிலையில் எக்ஸ்இ தொற்று மும்பையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது. மும்பை மாநகராட்சி தகவலின்படி புதிய வைரஸ் திரிபு தொற்று கொண்ட நோயாளிகளுக்கு இதுவரை கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.  இதனை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய சான்றுகள்படி இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் மரபணு நிபுணர்களால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.