புதுதில்லி, ஜூன் 27 - பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப் பின் தலைவருமான பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு தொடர்பான போராட்டம் இனி நீதிமன்றத்தில் நடக்கும் என்றும், சாலையில் அல்ல என்றும் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கூட்டாக தெரிவித்துள்ளனர். பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டு மீது நட வடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் கட்ட போராட்ட த்தில் குதித்தனர். ஆனால் பிரிஜ் பூஷண் சொந்த கட்சி எம்பி என்பதால் அவரை காப்பாற்றுவதற்காக ஒன்றிய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கியது. எனினும் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் அனைத்தையும் சமாளித்து, தில்லி ஜந்தர் மந்தரில் இடைவிடா போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு போராட்டத்தை கண்டு கொள்ளாததால் மெழுகுவர்த்தி ஊர்வலம், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம், நாட்டுக்காக வென்ற பட்டங்களை கங்கையில் தூக்கி எறிய முயற்சி என தொடர்ந்து போராட்டம் நடத்தி னர்.
இதனால் அலறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களை பேச்சுவார்த்தை க்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் ஜூன் 15 தேதிக்குள் பிரிஜ் பூஷ ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின், ஜூன் 15 வரை போராட்டத்தை தற்காலிக மாக நிறுத்துவதாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் அறிவித்தனர். இந்நிலையில், ஜூன் 15 அன்று காவல்து றை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் போக்சோ சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது தில்லி காவல்துறை. இந்நிலையில் திங்களன்று வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. அறிவித்தபடி ஜூன் 15 அன்று பிரிஜ் பூஷணுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி எங்கள் போராட்டம் நீதி மன்றத்தில் நடக்கும்; சாலையில் அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பாக அளித்த வாக்கு றுதியையும் அரசு நிறைவேற்றி இருக் கிறது. தேர்தல் அடுத்த மாதம் 11 அன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, வாக்கு றுதிகள் நிறைவேற்றப்படுவதற்காக நாங்கள் காத்திருப்போம்” என தெரிவித்துள்ளனர்.