உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு-காஷ்மீரில் திறப்பு
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் - பாரமுல்லா இடையே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைத்தார். ஆற்றுப் படுகையிலிருந்து 331 மீட்டர் உயரமும், 725 மீட்டர் குறுக்கே நீண்டு, 96 உயர் இழுவிசை கேபிள் கம்பிகளால் வலிமையாக கட்டப்பட்டிருக்கிறது.