states

img

பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் மீது குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் மீது குற்றச்சாட்டு

அலகாபாத் உயர்நீதிமன்ற  நீதிபதி அடாவடி

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களு டன் விருந்துக்குச் சென்றுள்ளார். விருந்து நடைபெற்ற இடத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு உதவி செய்வதாகக் கூறி, நண்பர் குழுவில் இருந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.  இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் நொய்டாவிற்கு செல்லாமல், ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தனது உற வினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை யின் போது குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தரப்பு, “இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது. ஏனெனில் இருவரின் சம்மதத்துடன் தான் இது நடந்தது. குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீது குற்ற பின்புலம் எதுவும் இல்லை. கடந்த டிசம்பர் (2024) முதல் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் கிடைத்தால் அதை  தவறாக பயன்படுத்தமாட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்பார்” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்திற்குப் பின் அல காபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்,”பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இருந்தாலும் இந்த சம்பவத்துக்கு அவரே காரணம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவரது புகாரும் இதை உறுதி செய்கிறது. பாதிக் கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனை யில், பாலியல் வன்கொடுமை குறித்து மருத்துவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார். பாலியல் பலாத்காரத் தால் பாதிக்கப்பட்ட பெண் மீதான நீதி மன்றத்தின் கருத்து நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.