states

பாஜக-வை நம்பி ஆற்றில் இறங்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா!

பாட்னா, ஜூன் 20 - பீகாரில் நிதிஷ் குமார் தலைமை யிலான மகா கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. “நாங்கள் விரைவில் தில்லி செல்ல இருக்கிறோம். பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு வந்துள்ளது. இது குறித்து பரிசீலனை செய்ய இருக்கிறோம்” என்று  ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரான ஜிதன்ராம் மாஞ்சியின் மகனும் முன்னாள் மாநில அமைச்சருமான சந்தோஷ் குமார் சுமன் அறிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23 அன்று, பாஜக-வுக்கு எதிரான அனைத்து எதிர்க் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனோ (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. இது பாஜக-வுக்கு சவாலாக மாறியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் எப்படியாவது சல சலப்பை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் பீகார் மாநி லத்திலேயே அறியப்பட்ட தலித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மாஞ்சி யின், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி பலியாகியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமன், பீகார் அமைச்சரவை யிலிருந்து விலகிய பின்னணியில், தற்போது மகா கூட்டணியிலிருந்தே வெளியேறுவதாக ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி அறிவித்து ள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கான தனது நான்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவையும் திரும்பப் பெற்றுள்ளது.  

இதன்மூலம் மகா கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், கூட்டணியிலிருந்து ஒரு கட்சியை ஏமாற்றி வெளியே கொண்டுவந்து விட்டோம் என சிறிது ஆறுதல் அடைந்துள்ளது. ஆனால், ஜிதன்ராம் மாஞ்சி யின் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியது நல்லதுதான் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பாஜக-வுக்காக பீகாரில் ஆட்சியில் உள்ள மகா கூட்டணியை உளவுபார்த்து வருகிறார். ஜூன் 23 அன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தானும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறினார். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷ யங்களை அவர் பாஜக-வுக்கு கசிய விடுவார் என்பதால், அவரது கட்சி யை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறி னேன். ஆனால், அவர் மறுத்தார். எனவே, கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாம்; அதுவே நல்லது என்று அவரிடம் நேரடி யாக கூறிவிட்டேன்” என்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.