புதுதில்லி, ஏப். 11 - தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவணப்பட இயக்கு நர் லீனா மணிமேகலை. தற்போது கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வசித்து வருகிறார். இவர், இயக்கி நடித்திருந்த ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டியை டொராண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் கடந்த 2022 ஜூலை 2 அன்று வெளியிட்டார். இந்தியப் பெண் தெய்வமான காளி, ஒரு மாலை நேரத்தில் டொராண்டோ நகரத்தின் தெருக்களில் உலா வரும்போது நடக்கும் சம்பவங்களைப் பற்றி யதே இந்த ஆவணப்படம் என்ற நிலையில், இது தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்ட சுவ ரொட்டியானது, காளி வேடமணிந்த பெண்ணின் கையில் சிகரெட் இருப்பது போலவும், மற்றொரு கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களு டன் எல்ஜிபிடி (LGBTQ+) எனப்படும் தன்பாலின உறவாளர்கள் மற்றும் வரன்முறைக்கு அப்பாற் பட்ட பாலின உறவாளர் சமூகத்தை அடையா ளப்படுத்தும் ‘வானவில்’ கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது சமூகவலைதளங்களில் வெளியான நிலை யில், வழக்கம்போல இந்துத்துவா அமைப்பு களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. “லீனா மணிமேகலையைக் கைது செய்!” (#ArrestLeena Manimekalai) என்ற ஹேஷ்டேக்-கை சமூக வலை தளங்களில் டிரெண்ட் செய்த அவர்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையிடம் புகாரும் அளித்தனர். இந்த மாநிலங்களில் லீனாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) பதிவு செய்யப் பட்டன. இதையடுத்து, ‘காளி’ ஆவணப்பட சுவரொட்டிக் காக தனக்கு கொலை மிரட்டல்கள், பலாத்கார அச்சுறுத்தல்கள் வருவதால் இதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்-களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “திரைப்பட இயக்குநர் லீனா மணி மேகலைக்கு எதிரான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும், தில்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்” என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173-இன் கீழ் விசாரணை அதிகாரியால் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, மேற்கண்ட எப்ஐஆர்-களின் அடிப்படையில் மணிமேகலைக்கு எதிராக எந்த வொரு கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; மேலும் லீனா மணிமேகலை, தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்வது தொடர்பாக, தில்லி உயர் நீதி மன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள லாம்” என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக, நீதிமன்ற உத்தரவில் ‘காவல்துறை யின் விசாரணைக்கு லீனா மணிமேகலை ஒத்து ழைக்க வேண்டும்’ என்ற வரியைச் சேர்க்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “லீனா மணிமேகலை அமெரிக்காவில் வசித்து வரு கிறார். அவருடன் வீடியோ காலில் நீங்கள் பேசமுடியும்” என்று கூறிவிட்டார்.