புதுதில்லியில் செப்டம்பர் 9 (இன்று) துவங்கவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு பங்கேற்பதற்காக அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளியன்று இரவு 7 மணியளவில் இந்தியா வந்தடைந்தார். இது அவரது முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் வரவேற்றார்.