ஆந்திர மக்களுக்கு மாநிலத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மற்றும் மத்தியில் ஆளும் மோடி அரசு செய்யும் துரோகத்தை கண்டித்து, விஜயவாடாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் இணைந்து மாபெரும் மாநாட்டை நடத்தின. இந்த மாநாட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிவில் ஆளும் ஒய்எஸ்ஆர் (ஜெகன்மோகன்) மற்றும் தெலுங்குதேசம் (சந்திரபாபு நாயுடு), ஜன சேனா (பவன் கல்யாண்) ஆகிய கட்சிகள் பாஜகவுடன் மேற்கொண்டுள்ள நேரடி மற்றும் மறைமுகமாக கூட்டணியை தோற்கடிப்போம் என தலைவர்கள் உறுதி பூண்டனர்.