states

img

முஸ்லிம் கடைகளுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை!

மாரிகாம்பா,  துர்கா பரமேஸ்வரி கோயில் கமிட்டி நிர்வாகிகள் விளக்கம்

பெங்களூரு, மார்ச் 24- இந்து - முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த வேண்டும் என் பது பாஜக, ஏபிவிபி, பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்-பரிவாரங்களின் திட்ட மாகும். அந்த வகையில்தான், கர் நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை வைத்து பதற்றத்தை உருவாக்கினர். ஹிஜாப் தடைக்கு எதிராக, முஸ் லிம்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியபோது, இதனையும் தங்களி ன் பிளவுவாத அரசியலுக்குப் பயன் படுத்திக் கொண்டனர். இனிமேல், முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் யாரும் பொருட்களை வாங்கக் கூடாது என சமூக வலைதளங்களில் பிரச்சா ரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இந்தப் பின்னணியில்தான், கோயில் விழாக்களில் கடைகள் அமைப்பதற்கு முஸ்லிம் வியாபாரி களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்ப வங்கள் கர்நாடகத்தில் அரங்கேறி யுள்ளன. கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின் றன.

இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திரு விழாக்கள் நடப்பது வழக்கம்.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்து இருந்த இந்த திருவிழாக்களை இந்தாண்டு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்த விழாக்களின் போது, முஸ்லிம்களும் கடைகளை அமைப்பது காலம் காலமாக இருக் கும் ஒன்றாகும். எனவே, இந்த திரு விழாக்களை எதிர்நோக்கி முஸ்லிம் களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போட விட மாட்டோம் என்று பஜ்ரங் தள் கூறி யிருப்பதுடன், சில இடங்களில் கோயில் கமிட்டிகளை மிரட்டி, அவர் கள் மூலமாகவே முஸ்லிம்களுக்கு தடை விதித்துள்ளனர். தெற்கு கர்நாடகத்தின் கட லோரப் பகுதிகளில் கோடி மாரி காம்பா கோயில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விம ரிசையாக கொண்டாடப்படும் ஒன்றா கும். தொடர்ந்து 5 நாள்கள் நடை பெறும் இந்த விழாவில் சாதி, மத வித்தியாசங்களின்றி பலரும் பங்கெ டுப்பார்கள்.

ஆனால், இந்த திருவிழாவின் போது கடைகள் நடத்திக் கொள்வ தற்கான உரிமத்தைப் பெற்றுள்ள பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒரு வர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட வேற்று மதத்தினர் கடைகள் போட தடை விதித்துள்ளார். ஆனால், இந்த கோயில் கமிட்டி யின் தலைவர் எஸ்.கே.மாரியப்பா வோ, “திருவிழா கமிட்டி கடந்த காலத்தில் ஒருபோதும் வகுப்புவாத மாக இருந்தது இல்லை. ஆனால் சமீபத்திய ஹிஜாப் பிரச்சனைகள் காரணமாக, சமூக ஊடகங்களில்  பலர் முஸ்லிம் கடைக்காரர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற் கொண்டனர். திருவிழா சுமுகமாக நடக்க வேண்டுமானால், முஸ்லிம் களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்” என்று உண்மையைப் போட்டு உடைத்துள் ளார். இதேபோல, கர்நாடகத்தின் முல்கி பகுதியில், பாப்பநாடு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி தேவி கோயில் திரு விழாவிலும், “நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுடனும், நாங்கள் வணங்கும் மாடுகளைக் கொல்பவர் களுடனும், இந்த நாட்டின் ஒற்று மையை கேள்விக்கு உள்ளாக்கும் நபர்களுடனும் சேர்ந்து வியாபாரம் செய்ய மாட்டோம்” எனக் குறிப் பிட்டு விளம்பரத் தட்டிகள் வைக்கப் பட்டு இருந்தது.

ஆனால், இங்கும், கடைகளுக் கான ஏலத்தை எடுத்தவர்தான் இவ் வாறு தட்டிகளை வைத்துள்ளதாக வும், முஸ்லிம்களுக்கு தடை விதிக் கும் பேனர்கள் எதையும் தாங்கள் வைக்கவில்லை என்றும் கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள் ளனர். ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற வுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயி லின் ஆண்டு விழாவுக்கான கடை அமைப்பதைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்கள் ஏலத்திலேயே பங் கேற்க முடியாதபடி தடை விதிக்கப் பட்டுள்ளது. அழைப்பிதழில், இந்துக்கள் மட்டுமே மார்ச் 31 ஆம் தேதி ஏலத்தில் பங்கேற்க தகுதியுடை யவர்கள் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள ஒசமாரி குடி கோவிலில் இந்த வாரம் நடக்கவுள்ள வருடாந்திர திரு விழாவிற்கு மார்ச் 18 அன்று நடை பெற்ற ஏலத்தில் முஸ்லிம்களுக்கு கடைகளை ஒதுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. கடைகள் ஏலத்தில் இந்துக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று தாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் ரமேஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

இதேபோல பத்ராவதி, பத்கல், ஹாசம் உள்ளிட்ட இடங்களிலும் கோயில் கடைவீதியில் முஸ்லிம்கள் கடை வைப்பதற்கும் தடை ஏற்படுத் தப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களை மிகுந்த வருத்தம் அடையச் செய் துள்ளது. உடுப்பி மாவட்ட தெருவோர வியாபாரிகள் மற்றும் வியாபாரி கள் சங்கத்தின் செயலாளர் முஹம் மது ஆரிப் இதுதொடர்பாக கூறு கையில், “இதற்கு முன்பு இது போன்ற நிலை இருந்ததில்லை. சுமார் 700 பதிவு செய்யப்பட்ட சங்க உறுப்பினர்களில் 450 பேர் முஸ்லிம்  கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு எந்த வியாபாரமும் இல்லை. இப்போது மீண்டும் சம்பாதிக்கத் தொடங்கும் போது, கோவில் கமிட்டிகள் எங் களை ஒதுக்கி வைத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை, காங்கி ரஸ் எம்எல்ஏவும், கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான யு.டி.காதர் கர்நாடக சட்டப்பேரவையில் எழுப்பிப் பேசியுள்ளார். “பொது இடங்களில் பேனர் வைத்து நல்லிணக்கத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய் கின்றனர். இதனை மாநில அரசு தடுக்க வேண்டும்” என்று வலி யுறுத்தியுள்ளார். அதற்கு மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி பதிலளிக்கை யில், “இந்துக் கோவில் திரு விழாக்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடை வைப்பதற்கான தடை எதை யும் மாநில அரசு ஊக்குவிக்க வில்லை. வளாகத்திற்கு வெளியே பேனர்கள் வைத்தால், நாங்கள் (மாநில அரசு) நடவடிக்கை எடுப் போம்” என்று தெரிவித்துள்ளார்.