states

img

கார்ப்பரேட்டுகளின் தயவில் உயிர்வாழும் அவல நிலையை ஏற்க முடியாது...

முன்னதாக, திருவனந்தபுரம் சிறப்பு மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பி னரும், சிஐடியு கேரள மாநிலப் பொதுச் செயலா ளருமான எளமரம் கரீம் துவக்கி வைத்து உரை யாற்றினார். அப்போது, சுதந்திர இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து விரிவாகப் பேசினார். பல துறைகளில் இந்தியா தன்னிறைவு பெற, பொதுத்துறைகள் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்தார். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் உயிர்நாடியாக இருந்துவருவதை சுட்டிக் காட்டினார்.  இந்தியா சுதந்திரம் அடைந்தபின், மக்க ளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய  வேண்டியது அவசியமாக இருந்தது. இதற்கு தொழிற்துறையில் தன்னிறைவு பெற வேண்டி யது அவசியத் தேவையாக இருந்தது. இதன்  காரணமாக முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது 12 பொதுத்துறை நிறுவனங்கள் உரு வாயின. இவ்வாறு உருவான பொதுத்துறை நிறுவனங்கள், 1990-களில் அமல்படுத்தப்பட்ட நவீன தாராளமய, தனியார்மய, உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் போக்கு துவங்கியது. நிரந்தர வேலைகள் ஒழித்துக்கட்டப்பட்டன. ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டனர். அவுட்சோர்சிங் முறை கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தும் படித்த இளைஞர்களை, இன்று கார்ப்பரேட்டுகளின் தயவில் உயிர் வாழும் அவலத்தில் தள்ளியிருக்கிறது.  குறிப்பாக, ரயில்வே-யின் பல துறைகள்  பல பெயர்களில், தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 7,300 ரயில் நிலை யங்கள் இருக்கின்றன. நாள்தோறும் 2.40  கோடி பயணிகள் பயணம் செய்து வரு கிறார்கள். 9,140 சரக்கு ரயில்களையும் பெற்றி ருக்கிறது. இவை அனைத்தையும் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் அழித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எளமரம் கரீம் பேசினார். (ந.நி.)