நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் பேச்சு
புதுதில்லி, டிச.22 - “உருமாறிய புதிய வகை கொரோ னா வைரஸ் பரவலை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. முகக்கவசம் அணியும் நடைமுறை யை மாநில அரசுகள் மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்று நாடாளு மன்ற மக்களவையில் ஒன்றிய சுகா தாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில் டிசம்பர் 22 வியாழக்கிழமையன்று இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளிக் கையில் , “உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டி லிருந்து வரும் பயணிகளிடமிருந்து வைரஸ் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, வைரஸ் பரவல் குறித்த உலகளாவிய சூழல்களையும் கண்காணித்து, அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசுகள் உருமாறிய வைரஸ்களின் மாறுபாட்டை சரியான தருணத்தில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், முகக்கவ சம் அணிவதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்படு கிறது. அதேபோல், தனிமனித இடை வெளியும் பின்பற்றப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதை, தொடர்ந்து கண்காணித்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் முனைப்புடன் செயல்படு கிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மாநில அரசுகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 220 கோடி தடுப்பூசி மருந்து கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக உலக அளவில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரித்துள்ளன. ஆனா லும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகி தங்களை இந்தியா தொடர்ந்து கண்கா ணித்து வருகிறது என்று தெரிவித்தார்.
வாட்ஸ்அப் போலிச்செய்தியை நம்ப வேண்டாம்
உருமாறிய எக்ஸ்பிபி (XBB) வேரியன்ட் கொரோனா குறித்த ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. அதில் எக்ஸ்பிபி (XBB) வேரி யன்ட் மிகவும் தீவிரமானது என்றும், டெல்டா வேரியன்டை விட ஐந்து மடங்கு அதிக வீரியம்மிக்கது, அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் வந்துள்ள செய்தி போலி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம், பகிர வேண்டாம் என்றும் ஒன்றிய சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது. தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பாதிப்புக்கு காரணம் பிஎப்-7 (BF.7) எனும் உருமாறிய கொரோனா என சொல்லப்பட்டுள்ளது.ஐஎச்எம்இ (IHME) ஆய்வின்படி எக்ஸ்பிபி (XBB) வேரியன்ட் அதிகளவில் பரவக்கூடிய தாக இருந்தாலும் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை பெரிய அளவில் இருக்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.