சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு 6,000 கன அடியும், குடிநீர் தேவைக்கு 600 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 6,600 கன அடி வீதம் 2 டிஎம்சி வரை மேட்டூர் அணை மின் நிலையம் வழியாகவும் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் பாசனத்துக்கான நீர்திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.