states

img

பள்ளிகளில் நீர் குடிப்பதை உறுதி செய்ய ‘தண்ணீர் மணி’ திட்டம் கேரளத்தில் துவக்கம்

வீடுகளில் இருந்து குடிநீர் கொண்டு வர முடியாத மாணவர்களுக்கு குடிநீரை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், மணக்காடு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி யில், அதிகரித்து வரும் வெப்  பத்தை எதிர்கொள்ளும் வகையில்,  பள்ளிகளில் குடிநீர் இடைவேளை யை அனுமதிக்கும் ‘தண்ணீர் மணி’  திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவில் அமைச்சர் மேலும் பேசியதாவது: கேரளம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையப் போகிறது என்றால், அதிகபட்சமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மணி  திட்டம் கோடையில் ஏற்படும் நோய்  களை தடுக்க உதவும். தேவைப் படும் போது மாணவர்களை தண்  ணீர் குடிக்கச் சொல்ல வேண்டும். மாநிலத்தில் கோடை வெப்பம்  நிலவி வரும் சூழலில் பள்ளிகளில்  தண்ணீர் மணி அடிக்க கல்வித்  துறை முடிவு செய்துள்ளது. தற்  போதுள்ள இடைவெளிகளுடன் கூடுதலாக புதிய இடைவெளியை  அனுமதிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. குடிநீருக்கான இடை வெளி ஐந்து நிமிடங்கள் இருக்கும்.  காலை 10.30 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் தண்ணீர் மணி அடிக்  கும் என்று அமைச்சர் கூறினார். தண்ணீர் மணி அடித்த பின், மாண வர்களுக்கு குடிநீர் வழங்கி திட்  டத்தை அமைச்சர் துவக்கி வைத் தார். நிகழ்ச்சியில் விஎச்எஸ்இ துணை இயக்குநர் சிந்து, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்எஸ் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண் டனர்.